தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஜூன்.16, 2015:- தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவது குறித்து குழு அமைப்பது எப்போது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகள் அமைப்பது குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே. கவுல், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவது குறித்து குழு அமைப்பது எப்போது என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
இது குறித்து வியாழக்கிழமை பதில் அளிப்பதாக அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி கூறினார்.
முன்னதாக தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த விரைவில் சட்டம் இயற்ற உள்ளதாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.