இலங்கை மீனவர்கள் பிரச்னை : இந்தியாவுடன் சுமுகமான பேச்சு; இலங்கை அரசு அறிவிப்பு

மீனவர்கள் பிரச்னை : இந்தியாவுடன் சுமுகமான பேச்சு; இலங்கை அரசு அறிவிப்பு

பதிவர்: நிர்வாகி, வகை: இலங்கை  
படம்

ஜூன்.01, 2015:- இரு நாட்டு மீனவர்கள் பிரச்னையில் நன்நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு அடிப்படையில் தொடர்ந்து இந்தியாவுடன் பேச்சு நடத்துவோம்  என்று இலங்கை அரசு  தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பகுதியில் ஆண்டுக்கு 65 நாட்கள்  மீன்படிக்க இந்திய மீனவர்களைஅனுமதிக்க வேண்டும்  என்று இந்தியா தரப்பில் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அந்த கோரிக்கையை மறுத்த இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்  மகிந்தா அமரவீரா, இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க 65 மணி நேரம் கூட அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மகிஷினி கொலோனே கூறுகையில், இருநாட்டு மீனவர்களின்  வாழ்வாதாரத்துக்கு முழுமையாக மதிப்பளித்து, மனிதநேயக் கண்ணோட்டத்துடன் மீனவர் பிரச்னையை அணுகுவோம்.

மீனவர் பிரச்னையில் மனநிறைவான குறுகிய மற்றும் நீண்டகால தீர்வு கிடைக்கும் வரை இந்தியா, மற்றும் இலங்கை அரசுகள் நன்நம்பிக்கை மற்றும்  புரிந்துணர்வு அடிப்படையில், தொடர்ந்து  பேச்சுவார்த்தையில் ஈடுபடும். இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்படிக்க அனுமதி கோரிய  இந்தியாவின் கோரிக்கை குறித்து இருநாட்டு அரசு அதிகாரிகளும் மிகுந்த கவனத்துடன் ஆய்வு செய்வது அவசியம். 

குறிப்பாக இலங்கையின்  வடக்குப்பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் இந்த அனுமதி பாதிக்குமா என்பதை  கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையின் வடக்குப்பகுதியில் நீண்டகாலமாக நடைபெற்ற போர், பிரச்னை, கவலைகளைக் கடந்து, அப்பகுதி மீனவர்கள் இப்போது வாழ்க்கையை  தொடங்கியிருக்கிறார்கள். இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்படிக்கும் விசயத்தை மனிதாபிமான கண்ணோட்டத்திலும்,  வாழ்வாதாரத்தோடும் அனுகுவோம். இந்த விவகாரங்களில் இரு நாட்டு அரசுகளும் பல்வேறு மட்டங்களில் ஆலோசனை நடத்தியுள்ளன.

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி சென்னையில் நடைபெற்ற இருநாட்டு மீனவர்கள் பேச்சு நடத்தினர். அப்போது, இலங்கை கடற்பகுதியில் 3 ஆண்டுகளுக்கு  மீன்படிக்க அனுமதி கோரி, இந்திய மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரி்க்கையை நேர்மையாக நாங்கள் பரிசீலித்தோம்.  ஆனால், இலங்கை மீனவர்கள் அதை நிராகரித்தனர். இந்த முடிவை இந்திய அரசுமூலமாகவும் தெரிவித்துவிட்டோம் என்றார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்