மீன் பிடித்த போது மாயம் : காசிமேடு மீனவர்கள் 5 பேர் கதி என்ன?

மே.24, 2015:- காசிமேடு, ஜீவரத்தினம் நகரை சேர்ந்த மீனவர்கள் கடும்பாடி, மாயாண்டி, சக்திவேல், மணி, சுரேஷ் ஆகிய 5 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பைபர் படகு மூலம் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். ஆனால் அவர்கள் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் புகார் செய்யப்பட்டது. மாயமான மீனவர்களை மீட்கக் கோரி அவர்களது உறவினர்கள் கடந்த 2 நாட்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மாயான மீனவர்களை தேடும் பணியில் தமிழக கடலோர காவல் படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள், கப்பல் ஈடுபட்டு உள்ளது.
இன்று 3–வது நாளாக கடலோர காவல் படையினர் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். காலையில் 2 ஹெலிகாப்டர்கள் கடல் பகுதிக்கு பறந்து சென்றது. ஸ்டீல்ஷிப் என்று பெயரிடப்பட்ட கப்பல் ஆந்திர மாநிலம் கிருஷ்ண்பேட்டை கடல் பகுதியில் வரை தேடும் பணியில் ஈடுபட்டது.
ஆனால் இதுவரை மாயமான மீனவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. அவர்களது கதி என்ன ஆனது என்பது தெரியாததால் உறவினர்களும், மீனவர்களும் சோகத்தில் உள்ளனர்.