தமிழக மீனவர் நலனுக்கு எதிரான முடிவுகளை கைவிடுக : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மே.03, 2015:- தமிழக மீனவர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வகுக்கப்பட்டுள்ள மீனாகுமாரி கமிட்டி பரிந்துரைகளை திரும்பப்பெறுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
மீன் வளம் மற்றும் அது சம்பந்தமான கொள்கை குறித்து விசாரிப்பதற்கு மீனாகுமாரி தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டியின் இரண்டு பரிந்துரைகளை முதல்வர் தனது கடிதத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடிதத்தில் முதலாவதாக, தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பிரத்யேக பொருளாதார மண்டலங்களில் வெளிநாட்டுக் கப்பல்கள் கூட்டு சேர்ந்து மீன்பிடிக்க அனுமதிக்கலாம் என்ற பரிந்துரை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடியதாகும் என்று குறிப்பிட்டுள்ளார். 49% வரை அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது தமிழக மீனவர்கள் உரிமையை பறிக்கும் முயற்சி என கூறியுள்ளார்.
அடுத்தபடிடாக, ஆழ்கடல் மீன் பிடிப்பு கொள்கையும் வரன்முறை செய்ய வேண்டும் என்று கூறும் மீனாகுமாரி கமிட்டியின் பரிந்துரை மீனவர்கள் நலனுக்கு எதிராக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த இரண்டு பரிந்துரைகளையும் மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மீன்பிடி தொழில் சட்டம் இயற்றப்படும் வரை இந்தியாவில் மீன்பிடி தொழில் தொடர்பாக புதிய வரைமுறைகளை நிர்ணயிக்க வேண்டாம் எனவும் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.