இந்தியா ரூ.13,000 கோடிக்கு மேலான ஆதார் அட்டை டெண்டர் வரவேற்கப்படாமல் அளிக்கப்பட்டுள்ளது

ரூ.13,000 கோடிக்கு மேலான ஆதார் அட்டை டெண்டர் வரவேற்கப்படாமல் அளிக்கப்பட்டுள்ளது

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

செப் 21,2015:- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ரூ.13,000 கோடிக்கான ஆதார் அட்டைத் திட்டங்கள் எந்தவித டெண்டர்களுக்கும் அழைப்பு விடுக்கப் படாமல் வழங்கப்பட்டதாக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மீது புகார் எழுந்துள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்ட செயல்பாட்டாளர் அனில் கல்கலி தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இண்ட்யிய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு கேள்விகளை சமர்ப்பித்திருந்தார். இந்தத் தகவலில்தான் தற்போது டெண்டர் அழைப்பு விடுக்கப்படாமல் ரூ.13,000 கோடிக்கான ஆதார் அட்டைத் திட்டங்கள் பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது.

ஆணையம் அளித்துள்ள பதிலில், மொத்த திட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ.13,663.22 கோடி. இவை எந்த வித டெண்டர்களும் வரவேற்கப்படாமல் வழங்கப்பட்டுள்ளன. இதில் மே, 2015 வரை அளிக்கப்பட்ட 90.3 கோடி ஆதார் அட்டைகளுக்காக ரூ.6,503 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்த நாடுதழுவிய மிகப்பெரிய திட்டத்துக்கு 25 நிறுவனங்களுக்கு பலதரப்பட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டன. அவர்களது குழுஅமைப்பு விவகாரமும் முறையான வழிகாட்டுதல்கள் அடிப்படையில் செய்யப்பட்டதாக ஆணையம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளர் கல்கலி கூறும்போது, “இது அதிர்ச்சிகரமானது. நாட்டுமக்களின் பல்வேறு பிரிவினரும், உச்ச நீதிமன்றமும், சிவில் சமூக குழுக்களும் பெரும் கவலைகளை இத்திட்டம் குறித்து வெளிப்படுத்தியுள்ளனர், அதாவது தனியுரிமைக் கொள்கையை உடைப்பதாக ஆதார் திட்டம் உள்ளது. சுமார் 125 கோடி மக்களின் அந்தரங்க, சொந்த விவரங்கள் தனியார் நிறுவனங்களின் கைகளில் உள்ளது.

பிரதமர் மோடி இது குறித்து விசாரணை நடத்த வேண்டும், ஒப்பந்தங்கள் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மீது விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

ஆதார் திட்டத்துக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்சி, மேக் அசோசியேட்ஸ், விப்ரோ, எச்.சி.எல். எச்.பி. இந்தியா சேல்ஸ் (பி) லிட்., நேஷனல் இன்ஃபர்மேடிக்ஸ் செண்டர், சாகெம் மார்போ செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடட், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், எல்1 ஐடெண்டிடி சொல்யூஷன்ஸ், டோடம் இண்டெர்னேஷனல், லிங்க்வெல் டெலிசிஸ்டம், சாய் இன்ஃபோ சிஸ்டம்ஸ், ஜியோடெஸிக் லிட். ஐடி சொல்யுஷன்ஸ், என்.ஐ.எஸ்.ஜி, எஸ்.கியு.டி,.சி, டெலிசிமா கம்யூனிகேஷன்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்கள் இதில் அடங்கும்.

ஒரு ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்களில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல், பார்தி ஏர்டெல், பி.எஸ்.என்.எல். மற்றும் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆகியவை அடங்கும்

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்