இந்தியா ஆந்திராவில் இன்று நதிநீர் இணைப்பு திட்டம் துவக்கம்

ஆந்திராவில் இன்று நதிநீர் இணைப்பு திட்டம் துவக்கம்

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

செப் 20,2015:- ஆந்திராவில் நதி நீர் இணைப்பு திட்டத்தை அமல்படுத்தும் முதல் முயற்சியாக கோதாவரி ஆற்றின் நீரை கிருஷ்ண ஆற்றுடன் இணைக்கும் திட்டத்தை இன்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு துவக்கி வைக்கிறார்.

ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியின் ஆட்சி நடக்கிறது.முதல்வராக அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளார். நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ்ஆந்திராவின் முக்கிய நதிகளான கோதாவரி, மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் இன்று செயல்படுத்தப்படுகிறது.

80 டி.எம்.சி தண்ணீர் மிச்சம்:
இது தொடர்பாக ஆந்திர நீர்ப்பாசன துறை அமைச்சர் தேவினெனி உமாமகேஸ்வரராவ் பி.டிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி, ஆந்திராவில் நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் கோதாவரி ஆற்றின் நீரை, கிருஷ்ணா நிதியுடன் இணைக்கும் திட்டம் நாளை துவக்கப்படுகிறது. விஜயவாடாவில் உள்ள இப்ராஹிம்பட்டனம் கிராமத்தில் நடக்க உள்ள விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டத்தை துவக்கி வைக்கிறார். இதன் மூலம் 80 டி.எம்.சி. தண்ணீர் வீணாவது தவிர்க்கப்படும். இரு நதிகளின் நீர் இணையும் இடமான பட்டீசீமா பகுதி சுற்றுலா தலமாக மாறும்.இது ஆந்திரா அரசின் வரலாற்று சாதனை.இவ்வாறு அவர் கூறினார்.
தண்ணீருக்காக , பக்கத்து மாநிலங்களான கர்நாடகாவுடனும்,கேரளவுடனும் மல்லுக்கட்டும் தமிழகம் , இது போன்ற ஜீவாதார திட்டத்தை செயல்படுத்துமா?

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்