சகாயத்திற்கு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நோட்டீஸ்

செப் 12,2015:- ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில், ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை நிலையூர் பகுதியை 2012 ஆம் ஆண்டு 20 பேரக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் வீடு கட்ட சென்றபோது சிலர் தடுத்து மிரட்டினர். பின்னர் விசாரிக்கும்போது அந்த இடம் ஏற்கனவே வேறு சிலருக்கு ஒதுக்கிய இடம் என தெரியவந்தது.
இதனால் போலி பட்டாக்களை வினியோகித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் மற்றும் நேர்முக உதவியாளர் ஆகியோருக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தேன்.
இந்த மனு மீதான விசாரணையின்போது 20 பேருக்கும் வேறு இடத்தில் பட்டா வழங்கப்படும் என கலெக்டர் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் புதிய இடத்திற்கான பட்டா வழங்கப்படவில்லை.
எனவே நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அப்போதைய மாவட்ட ஆட்சியர் மற்றும் நேர்முக உதவியாளர் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதி ஆர்.சுப்பையா இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்குமாறு நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.