சூனியக்காரிகள் என கூறி 5 பேர் கொலை: 27 பேர் கைது

ஆக.08, 2015:- ஜார்க்கண்டின் ராஞ்சி மாவட்டத்தில் சூனிய வித்தை செய்பவர்கள் என கருதி 5 பெண்களை உள்ளுர் மக்கள் கொன்றுள்ள சம்பவத்தை அடுத்து போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொள்ள 27 பேரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து ராஞ்சி மாவட்டத்தின் காஞசியா கிராமப்புற போலீஸ் சூப்பிரெண்டு ராஜ் குமார் லக்ரா கூறும்போது, கிராமத்தை சேர்ந்த ஒரு குழுவினர் நீள கம்புகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு நள்ளிரவில் பெண்களை தாக்கி கொன்றுள்ளனர். அந்த பெண்கள் சூனிய வித்தை செய்து வந்துள்ளனர் என அவர்கள் கருதியுள்ளனர் என போலீசார் கூறியுள்ளார்.
அவர்களது உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்டில் கடந்த 2013ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட 160 பேரில் 54 பெண்கள் சூனியக்காரிகள் என கருதப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2001ம் ஆண்டில் இருந்து இந்த மாநிலத்தில் இதே காரணத்திற்காக 400 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதேபோன்று நாட்டில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை இந்த காரணத்தின் அடிப்படையில் 2 ஆயிரத்து 97 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தேசிய குற்ற பதிவு கழகம் தெரிவித்துள்ளது.
இந்த கொலை சம்பவத்தை அடுத்து கிராமத்தை சேர்ந்த 27 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் முதல் மந்திரி ரகுபர் தாஸ் கூறும்போது, அறிவுள்ள வயதில் இந்த சம்பவம் வருத்தத்தை தருகிறது. இந்த சமூகம் இது குறித்து நன்றாக சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.