தமிழ்நாடு தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

ஜூன்.16, 2015:- தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவது குறித்து குழு அமைப்பது எப்போது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகள் அமைப்பது குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே. கவுல், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவது குறித்து குழு அமைப்பது எப்போது என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

இது குறித்து வியாழக்கிழமை பதில் அளிப்பதாக அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி கூறினார்.

முன்னதாக தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த விரைவில் சட்டம் இயற்ற உள்ளதாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்