இலண்டன் சீட்டு இயந்திரங்களில் தமிழ்!

சிறீலங்காவில் ஆட்சிக்கு வந்த அரசுகள் மாறிமாறி, தமிழ்மொழி உத்தியோக மொழியாக உள்ளது என தமது சர்வதேச பிரச்சாரத்திற்கு கூறிய பொழுதிலும், தமிழ் மக்கள் தமது தாயாக பூமியான வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு சென்றால் அங்கு சிங்கள மொழி தெரியாது படும் துன்பங்கள் பல. விசேடமாக அரசாங்க இலாகாக்களில் சிங்களம் தெரியாமல் தமிழர் ஒன்றும் செய்ய முடியாத பரிதாப நிலை உள்ளது.
ஆனால் பிரித்தானியாவின் தலைநகரான இலண்டனில் நிலத்திற்கு கீழ் செல்லும் சுரங்க போக்குவரத்தான ‘இலண்டன் சுரங்க புகையிரத தரிப்பு நிலையங்களிலும், போக்குவரத்துச் சீட்டு விற்கும் இயந்திரங்களில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்க கூடியதாகவுள்ளது. இச் சீட்டு இயந்திரங்களில் உள்ள பதின்மூன்று மொழிகளில், தமிழ் மொழியும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.
சுருக்கமாக கூறுவதனால் இலண்டனில் ஆங்கிலம் தெரியாத ஒரு தமிழர், தனது ‘இலண்டன் சுரங்க புகையிரத’ பிரயாணச் சீட்டை, தனது தாய் மொழியான தமிழை பாவித்து பெற்றுக்கொள்ளக் கூடிய நிலை, இன்று பிரித்தானியாவின் இலண்டனில் உள்ளது. (http://www.tfl.gov.uk/roadusers/lez/tamil.aspx)