இலங்கை சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை தீர்மானிக்க வேண்டும்: ரஷ்யா

சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை தீர்மானிக்க வேண்டும்: ரஷ்யா

பதிவர்: நிர்வாகி, வகை: இலங்கை  
படம்

செப் 30,2015:- சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் 30வது அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தாக்கல் செய்தார்.  இந்த அறிக்கை மீதான பொது விவாதம் தற்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு காணொலி மூலம் பேசிய ஐ.நா.மனித உரிமைகள் ஆணையர் சையது அல் ஹூசைன், இலங்கையில் இறுதிக்கட்டப் போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.  தீவிரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விபரங்கனை இலங்கை அரசு இதுவரை வெளியிடவில்லை என்பதை சுட்டிக்காட்டிய சையது அல் ஹூசைன், மத சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து முந்தைய ராஜபக்சே அரசு விசாரிக்கவில்லை என்று கூறினார்.

மேலும் இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய ரஷ்ய பிரதிநிதி, சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை தீர்மானிக்க வேண்டும் என கூறினார். இதற்கிடையே இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் மீது இன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இந்தியா, அமெரிக்கா உள்பட மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் 24 நாடுகள் ஆதரவளித்தால் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்படும்.  இந்நிலையில் அலங்காரா வார்த்தைகளை பயன்படுத்தி விசாரணை அமைப்பை மாற்ற வேண்டாம். சர்வதேச விசாரணை மட்டுமே தேவை என தமிழர்கள் கூறியுள்ளனர்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்