அண்ணா நூற்றாண்டு நூலக வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

செப் 20,2015:- அண்ணா நூற்றாண்டு நூலக வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நூல்கள் வாங்குதல், பணியாளர் நியமனம் பொன்றவை கொள்கை முடிவு என அரசு பதிலளித்துள்ளது. அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் கொள்கை முடிவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர்நீதிமனறம் கூறியுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு 2 நாட்களில் சென்னையை அலங்கரித்தது தமிழக அரசு என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரையே அலங்கரிக்க முடிந்த தமிழக அரசுக்கு நூலகத்தை பராமரிக்க முடியாதா என்று சென்னை உயர்நீதிமனற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் சிவஞானம் கேள்வி எழுப்பினர். வழக்கு விசாரணையை செப்டம்பர் 29 ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமனற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நூலக வரி குறித்து கேள்வி
சென்னை மாநகராட்சி பொதுமக்களிடம் வசூலித்த நூலக வரி எவ்வளவு, வசூலித்த வரியை கொண்டு எந்தெந்த நூலகத்தை சீரமைத்துள்ளது மாநகராட்சி என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளனர்.