இலங்கை இறுதிப் போரில் இலங்கைக்கு உதவினார் கடாஃபி

இறுதிப் போரில் இலங்கைக்கு உதவினார் கடாஃபி

பதிவர்: நிர்வாகி, வகை: இலங்கை  
படம்

அக் 07,2015:-  லிபியாவின் முன்னாள் சர்வதிகாரி கடாஃபியின் உதவி கிடைத்திருக்காவிட்டால் இலங்கை பெரும் விழ்ச்சியை சந்தித்திருக்கும் என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்திருக்கிறார்.

சர்வாதிகாரி கடாபியுடன் நெருக்கமான உறவை வைத்திருந்தார் ராஜபக்சே என்று இலங்கை அதிபர் ஸ்ரீசேன அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார், பொதுநிகழ்ச்சிகளில் கடாபியின் தோள்மீது கை போடும் அளவிற்கு ராஜபக்சே   நட்பு கொண்டிருந்தார். அதனால்தான் அனைத்துலக சமூகம் இலங்கையை ஒதுக்கி வைத்திருந்தது எனக் கூறியிருந்தார் ஸ்ரீசேன.


அதற்கு பதிலளித்து ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில்: 2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில், இலங்கையின் வெளிநாட்டு நிதியிருப்பு மிகக் குறைவாக இருந்தது. இலங்கைக்கு நிதியுதவி கிடைப்பதை இழுத்தடிக்குமாறு மேற்கத்திய நாடுகள்,

 உலக வங்கி போன்ற  அமைப்புகளுக்கு நெருக்கடி கொடுத்தன.அப்போது கடாஃபி,  ஒரே ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்று இலங்கைக்கு 500 மில்லியன் டாலர் நிதி உதவி அளித்தார் என்று கூறியிருக்கிறார் ராஜபக்ச.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்