இலங்கையில் மல்லிகை சாகுபடியில் பெண்கள் ஆர்வம்

செப் 30,2015:- இலங்கையில் மல்லிகை சாகுபடிக்காக மதுரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மல்லிகைப் பூச்செடிகள், வவுனியாவிலுள்ள ஒரு பண்ணையில் வர்த்தக ரீதியில் நடப்பட்டுள்ளன.
இலங்கையில் மலர்களுக்கான தேவை அதிகமாக இருந்தாலும், அதற்கான உற்பத்தி வர்த்தக ரீதியில் இல்லாத குறை உணரப்பட்டதாலேயே இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மல்லிகை சாகுபடி வாழ்வாதாரமாக அமையும் என்ற நம்பிக்கையால், மதுரையில் மல்லிகை சாகுபடியில் நல்ல அனுபவம் கொண்டவர்களின் உதவியுடன் இந்தத் திட்டம் கொண்டுவந்துள்ளதாக மல்லிகைப் பண்ணையை ஏற்படுத்தியுள்ள உள்ளூர் வர்த்தகர் பிரேமந்திரராஜா தெரிவித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மல்லிகை சாகுபடியில் ஆர்வம் காட்டினால் தேவையான உதவிகள் செய்யப்படும் என இந்தியத் துணைத் தூதர் நடராஜன் கூறுகிறார். இந்தத் திட்டத்துக்காக இந்தியாவிலிருந்து 30 ஆயிரம் மதுரை மல்லிகைச் செடிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.