தமிழ்நாடு 15 ஆண்டுகளுக்கும் மேலாக 100 சதவீத சுங்கம் வசூலிப்பது ஏன்?

15 ஆண்டுகளுக்கும் மேலாக 100 சதவீத சுங்கம் வசூலிப்பது ஏன்?

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

ஆக.29, 2015:- பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: மத்திய நெடுஞ்சாலை ஆணைய விதிகளின்படி, நெடுஞ்சாலை அமைக்க செய்த முதலீடு எடுக்கப்பட்டு விட்டால், அதன்பின், அந்த சாலையின் பராமரிப்புக்காக, 40 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால், தமிழகம் மட்டுமின்றி; ஒட்டுமொத்த இந்தியாவிலும், எந்த சாலையிலும், இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.

நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்ட நாளிலிருந்து, அதிகபட்சமாக, ஏழு ஆண்டுகளில், முதலீட்டை திரும்ப எடுக்க முடியும் என, ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலைகளில், இன்றும், 100 சதவீத சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்துடன், ஆண்டுக்கு ஒரு முறை, 10 - 15 சதவீதம், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது; இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

தரமான சாலைகளில், பயணம் செய்யும் உரிமை மக்களுக்கு உள்ளது. இதற்கு மாறாக, தனியார் மூலம் சாலைகளை அமைத்து, அதற்கு மக்களிடம் கட்டணம் வசூலிப்பது, இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரானது; இந்த போக்கு, மாற்றப்பட வேண்டும். சாலை அமைப்பதற்காக செய்த முதலீடு, திரும்ப எடுக்கப்பட்ட பின், அச்சாலைகளின் பராமரிப்புக்காக, 20 சதவீத கட்டணம் மட்டுமே, வசூலிக்க வேண்டும் என, மத்திய அரசு ஆணையிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்