தமிழ்நாடு அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு : தமிழக அரசு உத்தரவை மீறும் ஐ.டி. நிறுவனங்கள்..

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு : தமிழக அரசு உத்தரவை மீறும் ஐ.டி. நிறுவனங்கள்..

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

ஜூலை.29, 2015:- தமிழகம் முழுவதும் நாளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள போதிலும், சென்னையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாளை வழக்கம் போல இயங்குவதாக அறிவித்துள்ளன.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகின்றன. இதையடுத்து தமிழகம் முழுவதும நாளை பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் சேர்த்து அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

 

இருப்பினும் நாளை சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள் இயங்கும் என்று ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதுதொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் நிறுவனங்கள் செய்தி அனுப்பியுள்ளது. அதில் வழக்கம் போல நாளை அலுவலகங்கள் இயங்கும், பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மெளன அஞ்சலி அனுஷ்டிக்கப்படும் என்றும் ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.. நாளை அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு, மற்றும் தனியார் பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த உத்தரவை ஐ.டி. நிறுவனங்கள் மீறுவது சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்